Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

iPhone X நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் விற்பனையாகும்

Apple நிறுவனம், அதன் iPhone X கைப்பேசியை வெளியிட்டுள்ளது. கண்ணாடி, துருப்பிடிக்கா எஃகு போன்றவற்றைக் கொண்டு அந்தக் கைப்பேசி உருவாக்கப்பட்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -
iPhone X நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் விற்பனையாகும்

(படம்: Channel NewsAsia)

Apple நிறுவனம், அதன் iPhone X கைப்பேசியை வெளியிட்டுள்ளது.
கண்ணாடி, துருப்பிடிக்கா எஃகு போன்றவற்றைக் கொண்டு அந்தக் கைப்பேசி உருவாக்கப்பட்டிருக்கிறது.

கைப்பேசியைப் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களின் முக அடையாளங்கள் அதில் பயன்படுத்தப்படுகின்றன.
கம்பியில்லா முறையில் மின்னூட்டும் வசதியும் அதில் உண்டு.
இதற்கு முன் வெளியிடப்பட்ட iPhone கைப்பேசிகளில் இருந்த 'Home' பொத்தான், iPhone X கைப்பேசியில் இல்லை.

iPhone X கைப்பேசியை எழுப்புவதற்கு, வாடிக்கையாளர்கள் கைப்பேசியைத் தட்டினால் போதும்.
இத்தகைய வசதிகளைக் கொண்ட அந்தக் கைப்பேசி விலை, $1,648க்கும் அதிகம்.

வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதியில் இருந்து, சிங்கப்பூர் உட்பட, 50 சந்தைகளுக்கு அந்தக் கைப்பேசி விநியோகம் செய்யப்படவிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்