நாளைத் தொடங்குகிறது கத்திரி வெயில்
தமிழகத்தில் நாளை கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் தொடங்க உள்ளது. நாளை முதல் வரும் 29ம் தேதி வரை தொடர்ந்து 26 நாட்கள் அக்னி நட்சத்திர காலம் தான். இந்தியர்களின் பாரம்பரிய காலக்கணக்கு முறைப்படி கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படும்.
தமிழகத்தில் நாளை கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் தொடங்க உள்ளது. நாளை முதல் வரும் 29ம் தேதி வரை தொடர்ந்து 26 நாட்கள் அக்னி நட்சத்திர காலம் தான்.
எல் நினோ கோளாறினால் உலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் ஏற்கனவே அதிகமான சூடு உள்ள காலம், அக்னி நட்சத்திரத்தின்போது அந்தச் சூடு மேலும் அதிகரிக்கும். அதனால் மரபுபடி தமிழர்கள் இந்த காலக்கட்டத்தில் கட்டுமானப் பணிகளிலோ குளம் வெட்டும் பணிகளிலோ ஈடுபடமாட்டார்கள். குளிர்பானங்கள், குளிர்ச்சியூட்டும் பழங்களை உண்டு வெயிலின் தாக்கத்தை குறைக்க முயல்வார்கள்.