எந்திர மனிதன், எந்திரப் போலீஸ் வரிசையில் எந்திர நாய்
தனியாக இருக்கும் மூத்தோருக்குத் துணையாக இருக்க உருவாக்கப்பட்டுள்ளது எந்திர நாய்.
தனியாக இருக்கும் மூத்தோருக்குத் துணையாக இருக்க உருவாக்கப்பட்டுள்ளது எந்திர நாய்.
மீரோ என்று அழைக்கப்படும் அந்த எந்திர நாய், செயற்கை நுண்ணறிவால் முகங்களை அடையாளம் காண்கிறது.
அதுமட்டுமன்றி யாராவது தம்மைத் தடவிக்கொடுத்தாலும் எந்திர நாயால் உணரமுடியும்.
கிட்டத்தட்ட உயிருள்ள நாயைப் போலவே எந்திர நாய் வலம் வருகிறதாம்.
என்னதான் இருந்தாலும் உயிருள்ள நாய் போல் வருமா?
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!