வன்முறை தூண்டும் பதிவுகள் - தேடி அழிக்கும் டுவிட்டர்
அரசியல், சமய வன்முறைகளைத் தூண்டும் டுவிட்டர் பதிவுகளை நீக்குவதற்கான முயற்சிகளில் முழுமூச்சுடன் இறங்கியிருப்பதாக டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
அரசியல், சமய வன்முறைகளைத் தூண்டும் டுவிட்டர் பதிவுகளை நீக்குவதற்கான முயற்சிகளில் முழுமூச்சுடன் இறங்கியிருப்பதாக டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
அதுபோன்ற பதிவுகளை அடையாளம் காண்பதில் பயனீட்டாளர்களையும் அரசாங்கங்களையும் மட்டும் நம்பியிராமல், தகுந்த மென்பொருளைப் பயன்படுத்துகிறது டுவிட்டர்.
இணையத் தீவிரவாதத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.
2016-இன் பிற்பாதியில் தீவிரவாதத்தைத் தூண்டியச் சந்தேகத்தின் பேரில் சுமார் 377,000 டுவிட்டர் கணக்குகளை நீக்கியதாக நிறுவனம் தெரிவித்தது.