280 எழுத்துகளைக் கொண்ட செய்திகளை நீங்கள் விரைவில் டுவிட்டரில் பதிவு செய்யலாம்
பிரபல சமூக ஊடகத் தளமான டுவிட்டரில் நீங்கள் தற்போது 140 எழுத்துகளைப் பயன்படுத்தி செய்திகளைப் பதிவு செய்யலாம். விரைவில் அந்த எழுத்துகளின் எண்ணிக்கை 280க்கு உயர்த்தப்படும் என்று டுவிட்டர் நேற்று (நவம்பர் 7) தெரிவித்தது. உலகமெங்கும் டுவிட்டரைப் பயன்படுத்துவோர் அதன் மூலம் பயன் பெறலாம்.
பிரபல சமூக ஊடகத் தளமான டுவிட்டரில் நீங்கள் தற்போது 140 எழுத்துகளைப் பயன்படுத்தி செய்திகளைப் பதிவு செய்யலாம். விரைவில் அந்த எழுத்துகளின் எண்ணிக்கை 280க்கு உயர்த்தப்படும் என்று டுவிட்டர் நேற்று (நவம்பர் 7) தெரிவித்தது. உலகமெங்கும் டுவிட்டரைப் பயன்படுத்துவோர் அதன் மூலம் பயன் பெறலாம்.
கூடுதல் எண்ணிக்கையிலான எழுத்துகளைக் கொண்டு செய்திகளைப் பதிவு செய்யும் போது, டுவிட்டரைப் பயன்படுத்துவோர் தங்களின் செய்தியில் திருத்தம் செய்வதற்குக் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்வதாக டுவிட்டர் தெரிவித்தது.
செய்திகளை அவர்கள் கைவிடும் சாத்தியமும் குறைவு என்று கூறப்பட்டது.
அந்தப் புதிய மாற்றம் எப்போது நடப்புக்கு வரும் என டுவிட்டர் குறிப்பிடவில்லை.