சிங்கப்பூரின் பத்தாவது நாடாளுமன்ற நாயகர் திரு டான் சுவான் ஜின் (காணொளி)
சிங்கப்பூரின் பத்தாவது நாடாளுமன்ற நாயகராகத் திரு டான் சுவான் ஜின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று கூடிய நாடாளுமன்றம் அந்த முடிவை அறிவித்தது.
சிங்கப்பூரின் பத்தாவது நாடாளுமன்ற நாயகராகத் திரு டான் சுவான் ஜின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று கூடிய நாடாளுமன்றம் அந்த முடிவை அறிவித்தது.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட திரு டான் நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்த மதிப்பையும் கண்ணியத்தையும் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
கொள்கைகள், சட்டங்கள் ஆகியவற்றில் தேவையான முடிவுகளை எட்டுவதிலும் சுதந்திரமான விவாதங்களை வழிநடத்துவதிலும் தாம் முனைப்புடன் பங்காற்ற விரும்புவதாக அவர் சொன்னார்.
நடுநிலையாகவும் நியாயமாகவும் அதே வேளையில் உறுதியாகவும் தமது பணி இருக்கும் என்று திரு டான் கூறினார்.