Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடற்குறையுள்ளோருக்கான கார் நிறுத்தும் இடங்களின் தவறான பயன்பாடு

உடற்குறையுள்ளோருக்கான கார் நிறுத்தும் இடங்களைத் தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து, 2,200 அபராதத் தொகையைக் கட்டுவதற்கான கடிதங்கள் கடந்த ஆண்டு அனுப்பப்பட்டன.c

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: உடற்குறையுள்ளோருக்கான கார் நிறுத்தும் இடங்களைத் தவறாகப் பயன்படுத்திய 2,200 பேருக்கு அபராதத் தொகையைக் கட்டுவதற்கான கடிதங்கள் கடந்த ஆண்டு அனுப்பப்பட்டன.

நாடாளுமன்றத்தில் சமூகக் குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரில் சானின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

பெரிய சக்கர நாற்காலிகள், நடமாட்டச் சாதனங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமே அத்தகைய இடங்கள் ஒதுக்கப்படும் என்று சமூகக் குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஜூலையில் தெரிவித்தது.

அது குறித்து கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து , அமைச்சு விளக்கம் அளித்தது. தகுதி அடிப்படையிலான புதிய திட்டத்தின் கீழ், மருத்துவரீதியாக உடற்குறை உள்ளோருக்கும், வாகனத்திலிருந்து இறங்கவோ, ஏறவோ கூடுதல் இடம் தேவைப்படுவோருக்கும், உடற்குறையுடையோருக்கான கார்நிறுத்துமிடம் ஒதுக்கப்படும் என்று அமைச்சு கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்