கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய சந்தேகத்தின் பேரில் 38வயது ஆடவர் கைது
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயது ஆடவர்மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். அவர் இணைய மோசடியில் ஈடுபட்டு ஏமாற்றிய பணத்தைச் சிங்கப்பூரிலிருந்து வெளியே அனுப்ப உதவியுள்ளதாக நம்பப்படுகிறது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயது ஆடவர்மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். அவர் இணைய மோசடியில் ஈடுபட்டு ஏமாற்றிய பணத்தைச் சிங்கப்பூரிலிருந்து வெளியே அனுப்ப உதவியுள்ளதாக நம்பப்படுகிறது.
ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் அவர் அந்தக் குற்றங்களைப் புரிந்திருக்கக் கூடுமெனக் காவல்துறையினர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டது.
அந்தச் சந்தேக நபர் தனது மோசடியில் சிக்கிய ஐவரை S$36,000யை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிவிடக் கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர், தனது நண்பரின் உத்தரவுப்படி அவர் அந்தப் பணத்தைச் சிங்கப்பூருக்கு வெளியே அனுப்ப உதவியதாகக் காவல்துறை கூறியது. சந்தேக நபர் மே 22ஆம் தேதி, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.