Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் பாத்தோக் தொழிற்சாலை வெடிப்பு: காயமுற்ற இருவர் இன்னும் மருத்துவமனையில்

புக்கிட் பாத்தோக் பகுதியில் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமுற்ற 5 பேரில், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
புக்கிட் பாத்தோக் தொழிற்சாலை வெடிப்பு: காயமுற்ற இருவர் இன்னும் மருத்துவமனையில்

(படம்: Singapore Ministry of Manpower/Facebook)

புக்கிட் பாத்தோக் பகுதியில் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமுற்ற 5 பேரில், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எஞ்சிய மூன்று பேர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

ZTP Ginseng Birdnest நிறுவனத்தின் தொழிற்சாலையில் வெடிப்பு ஏற்பட்டது.

அந்நிறுவனம் நிலைமையை மறுஆய்வு செய்யும்வரை, அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்