Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் - கோயம்பத்தூர் நேரடி விமானச் சேவை - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடக்கம்

புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் சிங்கப்பூரிலிருந்து கோயம்பத்தூருக்கு விமானம் செல்லும்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் - கோயம்பத்தூர் நேரடி விமானச் சேவை - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடக்கம்

(படம்: AFP/SAM PANTHAKY)

சிங்கப்பூர், கோயம்பத்தூர் ஆகிய நகர்களுக்கு இடையே நேரடி விமானச் சேவை அடுத்த மாதம் 18ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அந்தச் சேவையை வழங்கவுள்ளது.

புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் சிங்கப்பூரிலிருந்து கோயம்பத்தூருக்கு விமானம் செல்லும்.

சிங்கப்பூரிலிருந்து இரவு 10.40 மணி அளவில் கோயம்பத்தூரை நோக்கி விமானம் பயணத்தைத் தொடங்கும்.

இந்திய நேரப்படி பின்னரவு 12.30 மணி அளவில் விமானம் அங்கு சென்று அடையும்.

செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் கோயம்பத்தூரிலிருந்து விமானம் சிங்கப்பூருக்குப் புறப்படும்.

இந்திய நேரப்படி இரவு 11.15 மணி அளவில் கோயம்பத்தூரிலிருந்து புறப்படும் விமானம், சிங்கப்பூருக்குக் காலை 6.15 மணி அளவில் வந்து சேரும்.

தமிழகத்தின் கொங்கு வட்டாரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து பணிபுரிவோருக்கு, கோயம்பத்தூருக்கான நேரடி விமானச் சேவை அதிகப் பயனளிக்கும்.

தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இந்தியாவின் 16 நகரங்களுக்குச் சேவை வழங்குகிறது. 13 அனைத்துலக விமான நிலையங்களுக்குஅதன் 23 விமானங்கள் சேவை வழங்குகின்றன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்