Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பேருந்தில் இரு மாதர்களை மானபங்கம் செய்ததாக இந்திய ஆடவர்மீது குற்றச்சாட்டு

பேருந்தில் இரு மாதர்களை மானபங்கம் செய்ததாக 33-வயது ஆடவர்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பேருந்தில் இரு மாதர்களை மானபங்கம் செய்ததாக 33-வயது ஆடவர்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் 28ஆம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்த 29-வயதுப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக மெய்யர் நீலகண்டன் சந்தேகிக்கப்படுகிறார்.

ஓல்ட் சுவா சு காங் ரோட்டில் பேருந்துச் சேவை எண் 172இல் பயணம் செய்து கொண்டிருந்த போது அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது. அதே பேருந்தில் சுமார் 20 நிமிடங்கள் கழித்து 14-வயதுப் பெண்ணையும் அவர் மானபங்கம் செய்ததாக நம்பப்படுகிறது

கண்காணிப்புக் கேமரா வழியாக ஆடவரின் அடையாளத்தைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகள், திங்கட்கிழமை (13 நவம்பர்) அவரைக் கைதுசெய்தனர்.

அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் ஈராண்டுச் சிறைத்தண்டனையுடன் பிரம்படிகளும் அபராதமும் விதிக்கப்படலாம்.

சம்பவங்கள் நடந்தபோது மதுபோதையில் இருந்ததாகவும் குற்றத்தைப் புரிந்த நினைவு இல்லை என்றும் மெய்யர் கூறியுள்ளார். இரு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்குப் பிணைத்தொகையாக $10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவரது வழக்கு மீண்டும் அடுத்த புதன்கிழமை விசாரணைக்கு வரும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்