ஜூ கூன் ரயில் மோதல் - 24 ஆண்டுகளில் நேர்ந்த 2ஆவது பெரிய ரயில் மோதல் சம்பவம்
இன்று காலை (நவம்பர் 15) நடந்த ஜூ கூன் ரயில் மோதல் சம்பவம் சிங்கப்பூர்ப் போக்குவரத்து வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது ரயில் மோதல் சம்பவம் ஆகும்.
இன்று காலை (நவம்பர் 15) நடந்த ஜூ கூன் ரயில் மோதல் சம்பவம் சிங்கப்பூர்ப் போக்குவரத்து வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது ரயில் மோதல் சம்பவம் ஆகும்.
முதல் சம்பவம் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நிகழ்ந்தது. கிளமெண்டி ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் மோதின. காலை 7.50 மணி அளவில் அச்சம்பவம் நடந்தது. அதில் 156 பயணிகள் காயமடைந்தனர்.
அந்த நேரத்தில், ஜூரோங் ஈஸ்ட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், அந்த நிலையத்தில் வழக்கத்தை விட 2 நிமிடங்கள் கூடுதலாக நின்றது. தொழில்நுட்பக் கோளாற்றால் அந்த ரயில் அங்கு நின்றது. நின்று கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு ரயில் அதன் மீது மோதியது. மோதல் காரணமாகப் பயணிகள் தூக்கியெறியப்பட்டனர். 8 பேருக்குப் பலந்த காயங்கள் ஏற்பட்டன.
இன்று (நவம்பர் 15) காலை ஜூ கூன் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவத்தில் 25 பேர் காயமடைந்தனர்.
தொடர்புடைய செய்தி...