அடுத்த இரண்டு வாரங்களுக்கு "ஜில்" என குளிரவிருக்கும் இரவு வேளைகள்
சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு, இரவு வேளைகள் சற்று குளிர்ந்திருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது
சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு, இரவு வேளைகள் சற்று குளிர்ந்திருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தட்ப, வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸுக்குக் குறையலாம்.
பகல் நேரத்தில் அது 31 டிகிரி செல்சியஸுக்கும், 33 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாதத்துக்கான மழையின் அளவு, வழக்கத்தைவிட குறைவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.