சிங்கப்பூர் - மதுரை நேரடி விமானச் சேவை தொடங்கியது
சிங்கப்பூர், மதுரை ஆகிய நகரங்களுக்கிடையிலான நேரடி விமானச் சேவை நேற்றிரவு தொடங்கியது.
சிங்கப்பூர், மதுரை ஆகிய நகரங்களுக்கிடையிலான நேரடி விமானச் சேவை நேற்றிரவு தொடங்கியது.
நேற்றிரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எண் IX 684 மதுரையிலிருந்து புறப்பட்டு இன்று காலை சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
சிங்கப்பூரிலிருந்து நேரடி விமானச் சேவை வசதி கிடைக்கும் 16ஆவது நகரமாக மதுரை திகழ்கின்றது. திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு விமானம் புறப்படும்.
தமிழகத்தின் தென்புற மாவட்டங்களில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து பணிபுரிவோருக்கு, மதுரைக்கான நேரடி விமானச் சேவை அதிகப் பயனளிக்கும்.
இருவழிப் பயணத்துக்கான சராசரிக் கட்டணம், சுமார் 500 வெள்ளி என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன இணையத்தளம் தெரிவிக்கிறது.