Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊபர் ஓட்டுநருடன் ஏற்பட்ட விபத்தில் முகத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய இளையர்

சாலை வழியாக சைக்கிள் ஓட்டிச்சென்ற 14-வயது இளையரை ஊபர் ஓட்டுநர் மோதியதில் முகத்தில் காயங்களுடன் உயிர் தப்பினார்.

வாசிப்புநேரம் -
ஊபர் ஓட்டுநருடன் ஏற்பட்ட விபத்தில் முகத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய இளையர்

(படம்: Google Maps)

சாலை வழியாக சைக்கிள் ஓட்டிச்சென்ற 14-வயது இளையரை ஊபர் ஓட்டுநர் மோதியதில் முகத்தில் காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஸ்டில் ரோட்டுக்கும் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டுக்கும் இடைப்பட்ட சாலை சந்திப்பில் விபத்து நடந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, இளைஞரை
சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசென்றது.

காவல்துறை விபத்தை விசாரித்து வருகிறது.

விபத்துக்குள்ளான காரை ஊபர் ஓட்டுநர் ஓட்டியதாக ஊபர் நிறுவனம் உறுதிசெய்தது. ஆனால் விபத்து ஏற்பட்ட வேளையில் அவர் ஊபர் பயணத்தை மேற்கொள்ளவில்லை என்று சேனல் நியூஸ் ஏஷியாவிடம் அது தெரிவித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்