Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இரண்டு நாட்கள் ஏற்பட்ட இரயில் சேவை பாதிப்புகளுக்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள்

இரண்டு கோளாறுகளுக்கும் தொடர்பில்லை என அது தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
இரண்டு நாட்கள் ஏற்பட்ட இரயில் சேவை பாதிப்புகளுக்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள்

( படம் : ஜஸ்தின் ஒங் )

இன்று காலை டவுன்டெளன் பாதை, வடக்கு-தெற்கு பாதை இரண்டிலும் சேவைகள் பாதிக்கப்பட்டதற்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள் இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

இரண்டு கோளாறுகளுக்கும் தொடர்பில்லை என அது தெரிவித்தது.
முதற்கட்ட கண்டுபிடிப்புகளில் வடக்கு-தெற்கு பாதையில் ஏற்பட்ட பாதிப்புக்கு, ஏற்கனவே கோளாறு இருந்த ரயில் காரணமாக இருக்கக்கூடும் என ஆணையம் தெரிவித்தது.

அந்த ரயிலில்தான், சமிக்ஞைக் கோளாறு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களால் ரயில்கள் மெதுவாக நகர வேண்டிய நிலை ஏற்பட்டதென ஆணையம் விவரித்தது. 

இன்று காலை டவுன்டெளன் பாதையின் தானியக்க ரயில் மேற்பார்வை முறையில் பாதிப்பு நேர்ந்தது.

பணிமனையிலிருந்து ரயில்கள் சொந்தமாகக் கிளம்புவது அதனால் தடைபட்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்