Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போலிக் கைக்கடிகாரங்களை அதிக விலைக்கு விற்ற ஆடவர் கைது

சோதனையில் கைக்கடிகாரங்கள், அவற்றுக்கான வார்கள் ஆகிய 1,102 போலியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு $53,000.

வாசிப்புநேரம் -
போலிக் கைக்கடிகாரங்களை அதிக விலைக்கு விற்ற ஆடவர் கைது

(படம் : சிங்கப்பூர்க் காவல்துறை)

போலிக் கைக்கடிகாரங்களை விலை உயர்ந்தவையாக விற்ற ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றவியல் விசாரணைப் பிரிவு நேற்று முன்தினம் பீச் ரோடில் நடத்திய அதிரடிச் சோதனையில் 34-வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.

சோதனையில் கைக்கடிகாரங்கள், அவற்றுக்கான வார்கள் ஆகிய 1,102 போலியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு $53,000.

ஆடவர் இணைய விற்பனைத் தளங்களின் வாயிலாக போலிப் பொருட்களைப் பெற்று, அவற்றைச் சமூக ஊடகங்களில் அவர் மறுவிற்பனை செய்தார்.

போலிப் பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்கு $100,000 வரை அபராதத்துடன் ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்