Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீவு விரைவுச் சாலையில் காரை நோக்கி நடந்த ஆடவர்

தீவு விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அந்த ஆடவர் தம் காரை நோக்கி நடந்துவந்ததாகச் சொன்னார் கிளண்டோல்ஃப் சுவா.

வாசிப்புநேரம் -
தீவு விரைவுச் சாலையில் காரை நோக்கி நடந்த ஆடவர்

(படம் : Facebook / Glendolph Chua)

தீவு விரைவுச் சாலையில் கடந்த சனிக்கிழமை நடந்த விபத்து ஒன்றை நேரில் பார்த்தோர் முன்வரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 54 வயது ஆடவரை மோதிய கார் ஓட்டுநர் அந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தீவு விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அந்த ஆடவர் தம் காரை நோக்கி நடந்துவந்ததாகச் சொன்னார் கிளண்டோல்ஃப் சுவா.

எச்சரிக்கை ஒலி எழுப்பியும் அந்த ஆடவர் தொடர்ந்து நடந்து வந்ததாகச் சொன்னார் அவர்.

துவாசை நோக்கிச் செல்லும் வழியில் சம்பவம் நடந்தது.

சம்பவம் குறித்து சனிக்கிழமை காலை தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

டான் டாக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது அந்த ஆடவர் சுய நினைவோடு இருந்துள்ளார்.

விசாரணை தொடர்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்