இரண்டாவது ஆகப் பெரிய பலதுறை நடவடிக்கையை மேற்கொண்டுள்ள இணையப் பாதுகாப்பு அமைப்பு
CSA எனப்படும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, அதன் இரண்டாவதும் ஆகப் பெரியதுமான பலதுறை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
CSA எனப்படும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, அதன் இரண்டாவதும் ஆகப் பெரியதுமான பலதுறை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இணையத் தாக்குதல்களைச் சமாளிக்கும் முறையையும், நெருக்கடி நேரச் செயலாக்க முறையையும் சோதிப்பது அதன் நோக்கம்.
Exercise Cyber Star என்றழைக்கப்படும் அந்த நடவடிக்கையில், சிங்கப்பூர் நெருக்கடி நேரத் தகவல் கட்டமைப்பில் இடம்பெறும் 11 அமைப்புகளும் பங்கெடுத்தன.
அத்தியாவசியச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கான பொறுப்பை வகிக்கும் அமைப்புகளும் அதில் அடங்கும்.
பல்வேறு துறைகளின் தலைவர்களும், உரிமையாளர்களும் இன்றைய நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
துணைப் பிரதமர் தியோ சீ ஹியென் அதனைப் பார்வையிட்டார்.
தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளவும், தயார்நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளவும் அனைவருக்கும் சிறந்த வாய்ப்பாய் அது அமைந்ததாகத் திரு. தியோ கூறினார்.