NS50 பற்றுச்சீட்டுகளை 6000க்கும் மேற்பட்ட கடைகளில் பயன்படுத்தலாம்
100 வெள்ளி மதிப்புள்ள NS50 பற்றுச்சீட்டுகளை, முன்னாள், இந்நாள் தேசியச் சேவையாளர்கள் இம்மாத நடுப்பகுதியிலிருந்து பெறவுள்ளனர்.
100 வெள்ளி மதிப்புள்ள NS50 பற்றுச்சீட்டுகளை, முன்னாள், இந்நாள் தேசியச் சேவையாளர்கள் இம்மாத நடுப்பகுதியிலிருந்து பெறவுள்ளனர்.
தற்காப்பு அமைச்சு அதனைத் தெரிவித்தது.
பற்றுச்சீட்டுகள், தேசியச் சேவையின் 50 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வழங்கப்படும் NS50 அங்கீகாரத் தொகுப்புகளின் ஓர் அங்கம்.
SAFRA அல்லது உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவில் ஓராண்டுக்கான உறுப்பியத்தையும் தேசியச் சேவையாளர்கள் இலவசமாகப் பெறுவர்.
அவற்றில் தற்போது உறுப்பினராக இருக்கும் முழு நேரத் தேசியச் சேவையாளர்களும் தேசியச் சேவையாளர்களும் அவர்களின் தொகுப்புகளை அஞ்சல் மூலம் பெறுவர்.
NS50 அங்கீகாரத் தொகுப்பிற்கு அடுத்த ஆண்டு ஜூன் இறுதி வரை பதிவு செய்யலாம்.
அந்த பற்றுச்சீட்டுகளை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளிலும் சேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.
பற்றுச்சீட்டுகள் அடுத்த ஆண்டு இறுதியில் காலாவதியாகும்.