Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய தினக் கூட்ட உரையைக் காணப் பிரதமர் அழைப்பு

பிரதமர் லீ சியென் லூங், தேசிய தினக் கூட்ட உரையைக் காண சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமது ஃபேஸ்புக்கில் அவர் அந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்

வாசிப்புநேரம் -
தேசிய தினக் கூட்ட உரையைக் காணப் பிரதமர் அழைப்பு

பிரதமர் லீ சியென் லூங். (கோப்புப்படம்: AFP)

பிரதமர் லீ சியென் லூங், தேசிய தினக் கூட்ட உரையைக் காண சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமது ஃபேஸ்புக்கில் அவர் அந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தேசியதினக் கூட்ட உரை நாளை மாலை 6.45 மணிக்குத் தொடங்கும்.

உரையின் நேரலையைக் காண்பதற்கான இணைப்புகளைத் திரு லீ தமது பதிவில் சேர்த்துள்ளார். மாலை 6.45 மணி முதல் 7.30 மணி வரை மலாய், மாண்டரின் மொழிகளில் திரு லீ உரையாற்றுவார்.

பின்னர் இரவு சுமார் 8.15 மணிக்கு அவரது ஆங்கில உரை தொடங்கும். அது 9.30 மணி வரை நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியாகார்ப் ஒளிவழிகள், வானொலி நிலையங்கள், இணையத்தளங்கள் ஆகியவற்றில் பிரதமரின் உரை நேரடியாக இடம்பெறும்.
மீடியகார்ப்பின் டாகுள் (Toggle) இணையத்தளம், பிரதமர் அலுவலகத்தின் யூட்டியூப் (YouTube) ஒளிவழி, பிரதமரின்ஃபேஸ்புக் பக்கம், Reach-இன் ஃபேஸ்புக் பக்கம் ஆகியவற்றிலும் தேசிய தினக் கூட்ட உரையின் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்.

பிரதமர் உரையின் தமிழாக்கம் வசந்தம் ஒளிவழி, ஒலி 96.8 ஆகியவற்றில் இடம்பெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்