தென்கிழக்காசியப் போட்டிகள்: நெடுந்தொலைவோட்டத்தில் சிங்கப்பூருக்குத் தங்கம்
தென்கிழக்காசியப் போட்டிகளின் ஆண்களுக்கான நெடுந்தொலைவோட்டத்தில் சிங்கப்பூரின் சோ ருய் யோங் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.
கோலாலம்பூர்: தென்கிழக்காசியப் போட்டிகளின் ஆண்களுக்கான நெடுந்தொலைவோட்டத்தில் சிங்கப்பூரின் சோ ருய் யோங் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 2 மணி 29 நிமிடம் 26 வினாடிகள். போட்டி இன்று ( 19 ஆகஸ்ட்) காலை நடைபெற்றது.
இந்தோனேசியாவின் அகுஸ் பிரயோகாவை இரண்டாம் நிலைக்குத் தள்ளி விருதைத் தற்காத்தார் சோ.