தென்கிழக்காசிய விளையாட்டுகள்: அரையிறுதியில் சிங்கப்பூரின் வலைப்பந்து அணி வெற்றி
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் வலைப்பந்து அணி, தாய்லந்து அணியை 55-43 என்ற புள்ளிக் கணக்கில் அரையிறுதியில் வீழ்த்தியுள்ளது.
கோலாலம்பூர், மலேசியா: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் வலைப்பந்து அணி, தாய்லந்து அணியை 55-43 என்ற புள்ளிக் கணக்கில் அரையிறுதியில் வீழ்த்தியுள்ளது.
ஆட்டத்தின் முதல் கால் பகுதியில், சிங்கப்பூர் 13-9 என்ற புள்ளிக் கணக்கில் முன்னணி வகித்தது.பாதி ஆட்டம் முடிந்த நிலையில் சிங்கப்பூர் 26 புள்ளிகளும் தாய்லந்து 21 புள்ளிகளும் பெற்றிருந்தன.
ஆட்டத்தின் முக்கால் பகுதியில், 41- 30 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் தொடர்ந்து தனது முன்னிலையைத் தக்க வைத்து இறுதியில் வெற்றி பெற்றது.அடுத்து சிங்கப்பூர், இறுதிப் போட்டியில் மலேசியாவை எதிர்த்து ஆடும்.