சீனாவில் மூன்று நாள் அதிகாரத்துவ பயணத்தைத் தொடங்கும் பிரதமர் லீ
ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையில் வலுவான ஒத்துழைப்பைச் சிங்கப்பூர் ஊக்குவித்து வருகிறது.
ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையில் வலுவான ஒத்துழைப்பைச் சிங்கப்பூர் ஊக்குவித்து வருகிறது.
அடுத்த ஆண்டு ஆசியானைச் சிங்கப்பூர் வழிநடத்தவுள்ளது.
இந்தச் சூழலில் பிரதமர் லீ சியென் லூங் சீனப் பிரதமர் லீ கெச்சியாங்கைச் சந்தித்துள்ளார்.
3 நாள் அதிகாரத்துப் பயணமாக திரு. லீ, சீனா சென்றுள்ளார்.
தலைவர்கள் இருவரும் இருதரப்பு உறவுகளை மறுவுறுதிப்படுத்தியுள்ளனர்.
சிங்கப்பூரும், சீனாவும் நிதி, நீதி, சட்டம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படும் வாய்ப்பு குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.
தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியெட், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் ஆகியோரும் பிரதமருடன் சென்றுள்ளனர்.