சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு இறுதியில் புதிய கைத்தொலைபேசிச் சேவை அறிமுகமாகும்
சிங்கப்பூரின் நான்காம் தொலைத்தொடர்பு நிறுவனமான TPG Telecom அடுத்த ஆண்டு இறுதிக்குள் தீவு முழுவதும் கைத்தொலைபேசி சேவையை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
சிங்கப்பூரின் நான்காம் தொலைத்தொடர்பு நிறுவனமான TPG Telecom அடுத்த ஆண்டு இறுதிக்குள் தீவு முழுவதும் கைத்தொலைபேசி சேவையை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த TPG Telecom 18 மாதங்களுக்குள் தீவு முழுதுமான 4G கட்டமைப்புச் சேவையை அறிமுகம் செய்ய சிங்கப்பூர்த் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் கடந்த டிசம்பர் மாததில் அவகாசம் வழங்கியது.
கைத்தொலைபேசிச் சேவைக்கான கட்டமைப்பை நிறுவும் பணிகள் நடந்து வருவதாக நிறுவனம் கூறியுள்ளது.
கைத்தொலைபேசிச் சேவையை தொடங்குவதற்காக $300 மில்லியன் செலவிடவிருப்பதாக TPG Telecom நிறுவனம் அறிவித்திருந்தது.