வலுவான தலைமைத்துவக் குழு அவசியம் - திரு.கோ
சிங்கப்பூரின் புதிய தலைமுறை தலைவர்கள் வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய புது யுகக் குழுவாகச் செயலாற்ற வேண்டும் என ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் திரு கோ சோக் தோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் புதிய தலைமுறை தலைவர்கள் வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய புது யுகக் குழுவாகச் செயலாற்ற வேண்டும் என ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் திரு கோ சோக் தோங் தெரிவித்துள்ளார்.
சிறு நாடான சிங்கப்பூருக்கு வலுவான தலைமைத்துவம் அவசியம் என தேசிய தின விருந்து நிகழ்ச்சியில் அவர் கூறினார். அதே நேரத்தில் சமூகப் பிணைப்பும் இன நல்லிணக்கமும் அரசியலில் நிலைத்தன்மையும் மிக அவசியம் எனத் திரு.கோ குறிப்பிட்டார்.
நான்காம் தலைமுறை தலைவர்கள் ஒருங்கிணைந்த குழுவாகச் செயலாற்றுவதோடு அவர்கள் தங்கள் தலைவரை அடையாளம் காண வேண்டும் என்றும் திரு.கோ சொன்னார்.