Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாலியல் குற்றம்: சந்தேக நபரைக் கையும் களவுமாகப் பிடித்தவருக்குப் பாராட்டு

தானா மேரா ரயில் நிலையத்தில் பெண்ணைத் தகாத முறையில் காணொளி எடுத்துக்கொண்டிருந்த நபரைக் கையும் களவுமாகப் பிடித்த ராணுவ அதிகாரி சாமுவெல் ஓங்கைக் காவல்துறை பாராட்டியுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: தானா மேரா ரயில் நிலையத்தில் பெண்ணைத் தகாத முறையில் காணொளி எடுத்துக்கொண்டிருந்த நபரைக் கையும் களவுமாகப் பிடித்த ராணுவ அதிகாரி சாமுவெல் ஓங்கைக் காவல்துறை பாராட்டியுள்ளது.

சாங்கி கடற்படைத் தளத்திற்கு ME1 ஓங் சென்றுகொண்டிருந்தபோது, உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பெண்ணை ஆடவர் தனது கைத்தொலைபேசியால் படமெடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அந்த ஆடவரை அணுகிய ME1 ஓங், தாம் அதிகாரிகளை அழைக்கப்போவதாகக் கூறினார். அந்த 18 வயது சந்தேக நபர் தப்பிக்க முயலாமல், தான் செய்ததற்கு மன்னிப்புக் கேட்டதாக ME1 ஓங் சொன்னார்.

Singapore Police Force

25-YEAR-OLD PRESENTED WITH LETTER OF APPRECIATION FOR PUBLIC-ASSISTED ARREST On the 31 October 2017 at about 7.20AM, Mr Samuel Ong, a Singapore Armed Forces serviceman, was on an escalator at Tanah...

இருவரும் மின்படிக்கட்டிகளில் மேலே ஏறிச்சென்றதுடன் ME1 ஓங் ரயில் அதிகாரிகளை அழைத்து நடந்தவற்றைக் கூறினார். ME1 ஓங்கின் முயற்சிகளுக்காகக் காவல்துறையினர் அவருக்குப் பாராட்டுக் கடிதத்தை வழங்கினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்