Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரயில் சேவைத் தடை: அதிக நேரம் பிடிக்கும் பயணங்கள்

துவாஸ் வட்டாரத்தை நோக்கிச் செல்லும் ரயில் பயணிகளின் பயண நேரம் சுமார் 20 நிமிடங்கள் அதிகரித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: துவாஸ் வட்டாரத்தை நோக்கிச் செல்லும் ரயில் பயணிகளின் பயண நேரம் சுமார் 20 நிமிடங்கள் அதிகரித்திருக்கிறது.

ஜூ கூன், கல் சர்க்கிள் ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்தத் தடத்தில் இலவசப் பேருந்து சேவைகள் இயங்கி வருகின்றன.

ஜூ கூன் ரயில் நிலையத்தில் ரயில்கள் மோதிக் கொண்டதில், குறைந்தது 38 பேர் காயமடைந்தனர்.

ரயில் தடங்களுக்கான பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைய ஒரு மாதம் வரை ஆகும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இன்று காலை 6.30 மணியளவில் சேனல்நியூஸ் ஏஷியா ஜூ கூன் நிலையத்திற்குச் சென்றபோது அங்கே இலவசப் பேருந்து சேவைக்காகப் பயணிகள் காத்திருந்ததைப் பார்க்கமுடிந்தது.

பேருந்து நிறுத்துமிடத்தில் கூட்டம் அதிகரித்தபோதும் பேருந்துகள் அடிக்கடி வந்ததால் பயணிகளுக்குச் சிரமம் ஏற்படவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்