பிரிட்டனில் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வெளியுறவு அமைச்சு ஆலோசனை
பிரிட்டனில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் செய்யும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆலோசனை விடுத்துள்ளது சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு.
பிரிட்டனில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் செய்யும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆலோசனை விடுத்துள்ளது சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு.
குறிப்பாகப் பொது இடங்களில் சிங்கப்பூரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
லண்டன் சுரங்க ரயிலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அமைச்சின் ஆலோசனை அறிக்கை வந்துள்ளது.
வெளியுறவு அமைச்சால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள்:
1. பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கவனித்து வர வேண்டும்.
2. அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
3. முழுமையான பயணக் காப்பீட்டைப் பெறுவதோடு, அதன் விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
4. அவசர நேரத்தில் தொடர்புகொள்வதற்கு ஏதுவாக அமைச்சுடன் மின்பதிவு செய்துகொள்ள வேண்டும்