விமானத்தின் இயந்திரத்தில் காசுகளை வீசி எறிந்த மூதாட்டி
விமானத்தில் பயணம் செய்யவிருந்த மூதாட்டி ஒருவர் அதிர்ஷ்டத்திற்காக விமான இயந்திரத்திற்குள் காசுகளை வீசி எறிந்தார்.
சீனா: விமானத்தில் பயணம் செய்யவிருந்த மூதாட்டி ஒருவர் அதிர்ஷ்டத்திற்காக விமான இயந்திரத்திற்குள் காசுகளை வீசி எறிந்தார்.
லக்கி ஏர் விமானத்தில் பயணம் செய்யவிருந்த அவர், விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்
சீனாவின் அன்ஹுய் விமான நிலையத்தில் சம்பவம் நடந்தது.
76 வயது மூதாட்டி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர்மீது குற்றச்சாட்டுச் சுமத்தப்படுமா என்பது தெரியவில்லை.
பாட்டியின் செயலால் விமானம் துரதிஷ்ட்டவசமாகத் தாமதமடைந்தது.
பாதுகாப்புச் சோதனைகளுக்காக இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்ட விமானம், மறுநாள் காலை புறப்பட்டுச் சென்றது.
இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல.
இதற்கு முன் 80 வயது மூதாட்டி ஒருவர் காசுகளை விமானத்தின் இயந்திரத்திற்குள் எறிந்தார்.
அவற்றுள் ஒன்று இயந்திரத்தில் சிக்கிக் கொண்டது.
காசுகளை இயந்திரத்தில் வீசி எறிந்தால், பயணம் பாதுகாப்பாக இருக்கும் என்பது காசுகளை வீசி எறியும் பாட்டிகளின் மூட நம்பிக்கை.