Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடந்த 9 மாதங்களில் 81 பேர் ஒப்பனைப்பொருட்களைத் திருடியதற்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்

ஆர்ச்சர்ட் ரோட்டில் ஒப்பனைப்பொருட்களைத் திருடியதற்காக கடந்த ஒன்பது மாதங்களில் 81 பேரைக் காவல் துறை கைதுசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஆர்ச்சர்ட் ரோட்டில் ஒப்பனைப்பொருட்களைத் திருடியதற்காக கடந்த ஒன்பது மாதங்களில் 81 பேரைக் காவல் துறை கைதுசெய்துள்ளது.

உதட்டுச்சாயம், கண்மை போன்ற பொருட்களைத் திருடுவோர் அவற்றை தங்கள் பைகளில், அல்லது சட்டைப் பைகளில் போட்டுக்கொண்டு, கட்டணம் செலுத்தாமல் கடையை விட்டுச் செல்கின்றனர்.

கடைகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் திருட்டுச் சம்பவங்கள் பதிவுச் செய்யப்படுவதால் திருடர்கள் பிடிபடுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகக் கடைகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சிகளைக் காவல்துறை அதிகரித்துள்ளது.

கடைகளின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது, கடை ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்குவது ஆகியவற்றைக் காவல்துறை வழங்கி வருகிறது.

கடைகளில் திருடுவோரின் குற்றம் நிரூபிக்கப்பட்டல் ஏழாண்டு சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்