வீடு புகுந்து பலாத்காரம் செய்த ஆடவருக்கு 21 ஆண்டு சிறைத்தண்டனை
அவர் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டது.
27 வயதுப் பெண் உறங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவர் அவரது கையை உரசியுள்ளார்.
கண் விழித்த அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
மெத்தையில் அவருக்குப் பக்கத்தில் முகமறியாத ஆடவர் ஒருவர் இருந்தார்.
அவரைப் பார்த்ததும் கத்திக் கூச்சலிடத் தொடங்கினார் அப்பெண்.
அந்த ஆடவர் பெண்ணின் வாயைப் பொத்தி, சரமாரியாகக் குத்தத் தொடங்கினார்.
பின்னர் அவர் அப்பெண்ணை பலாத்காரம் செய்தார்.
அந்தக் குற்றத்திற்காக 30 வயது முகமது சுடார்னோ நாஸிருக்கு 21 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 18 பிரம்படியும் இன்று(நம்பவர் 20) விதிக்கப்பட்டது.
அவர் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டது.
கடை வீட்டின் இரண்டாம் மாடியில் இருந்த பெண்ணின் படுக்கையறைக்குள் அவர் சுவரேறிக் குதித்தார்.
அத்துடன் அவர் போதைமிகு அபினையும் வைத்திருந்தார்.