மெக்ஸிக்கோ நிலநடுக்கம்: அதிபர் ஹலிமா அனுதாபம்
அதிபர் ஹலிமா யாக்கோப்,மெக்ஸிக்கோவை நேற்று உலுக்கிய கடும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஹலிமா யாக்கோப்,மெக்ஸிக்கோவை நேற்று உலுக்கிய கடும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு அதிபர் என்ரிகே பேனா நியேடோவுக்கு அனுப்பிய கடிதத்தில் அதிபர் ஹலிமா அதனைத் தெரிவித்தார்.
7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 225 பேர் மாண்டனர். இரு வாரங்களுக்கு முன் அங்கு ஏற்பட்ட அதிர்வுகளில் 100 பேர் உயிரிழந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவும், உயிர்ச்சேதமும் தமக்கு வருத்தமளிப்பதாகத் திருவாட்டி ஹலிமா தமது கடிதத்தில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்களின் சார்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
மெக்ஸிக்கோ மக்கள் விரைவில் அந்தப் பேரிடரிலிருந்து மீண்டுவருவர் என்று திருவாட்டி ஹலிமா நம்பிக்கை தெரிவித்தார்.
மெக்ஸிக்கோ சிட்டியில் வசிப்பதாகப் பதிவுச் செய்துகொண்ட சிங்கப்பூரர்களை வெளியுறவு அமைச்சு தொடர்புகொண்டது.
இதுவரை சிங்கப்பூரர் யாரும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் தக்க பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
மெக்ஸிக்கோவில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் தங்கள் குடும்பத்தாருடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவரசர உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் கீழ்வரும் எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக வெளியுறவு அமைச்சைத் தொடர்புகொள்ளலாம்.
எண்: +65 63798800/8855
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_officer [at] mfa.gov.sg