டௌன்டவுன் ரயில்பாதை - 3ஆம் கட்டப்பாதை இன்று திறப்பு
டௌன்டவுன் ரயில்பாதையின் 3ஆம் கட்டப்பாதை இன்று பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
டௌன்டவுன் ரயில்பாதையின் 3ஆம் கட்டப்பாதை இன்று பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
புதிய பாதையில் சேவைத் தடங்கல் ஏற்படக் கூடுமெனப் பயணிகளில் சிலர் அக்கறை கொண்டிருந்தனர்.
ஆனால் புதிய பாதையில் பயணம் செய்தபிறகு அது மிகவும் குறைந்திருப்பதாக, சேனல் நியூஸ்ஏஷியாவிடம் பேசிய பயணிகள் சிலர் கூறினர்.
பயணிகள் பலரும் டௌன்டவுன் ரயில்பாதை தங்களுக்குப் பயண நேரத்தை மிச்சமாக்கும் என்றும், தாங்கள் வசதியாக உணர்வதாகவும் கூறினர்.
அதிகாரபூர்வத் திறப்பையொட்டி இன்றும், நாளையும் டௌன்டவுன் ரயில்பாதை முழுவதும் பயணிகள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.