சாங்கி விமான நிலையத்திற்கு வந்த இந்திய நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 18% உயர்வு
சாங்கி விமான நிலையம் கடந்த மாதம் 5.2 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டது என்றும், அது ஓராண்டுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் 7% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையம் கடந்த மாதம் 5.2 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டது என்றும், அது ஓராண்டுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் 7% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையக் குழுமம் அந்தத் தகவலை வெளியிட்டது.
அனைத்து வட்டாரங்களுக்குமான பயணங்கள் அதிகரித்திருப்பது அந்த வளர்ச்சிக்குக் காரணம்.
சிங்கப்பூருக்கும், தெற்காசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்க வட்டாரங்கள் ஆகியவற்றுக்கும் இடையிலான பயணங்களின் விகிதம் ஈரிலக்க வளர்ச்சி கண்டுள்ளன.
ஆக அதிக வளர்ச்சி, சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகளின் விகிதத்தில் பதிவானது. அது 18 % அதிகரித்தது.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் பயணம் செய்தோர் விகிதம் 11% அதிகரித்தது.