சிங்கப்பூர் - சீனா உறவு முன்னைக்காட்டிலும் சிறப்பு: பிரதமர் லீ சியென் லூங்
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மேம்பட்ட நிலைத்தன்மையோடு, சிறந்த நிலையில் உள்ளதாய்ப் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மேம்பட்ட நிலைத்தன்மையோடு, சிறந்த நிலையில் உள்ளதாய்ப் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
தமது 3 நாள் சீனப் பயணத்தின் முடிவில் சியாமென் நகரில் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார். கடந்த ஆண்டில் இருநாடுகளுக்கு இடையிலும் சில பிரச்சினைகள் இருந்ததைப் பிரதமர் லீ சுட்டினார்.
இருதரப்புக்கும் இடையில் இவ்வாண்டு அதன் தொடர்பில் பல கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.
இருநாட்டு உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதன் அவசியம் பற்றிப் பேசிய திரு. லீ தலைவர்களுக்கு இடையில் கருத்துப் பறிமாற்றங்கள் இடம்பெறுவது முக்கியம் என்று குறிப்பிட்டார்.
அது ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். மாறிவரும் உலகச் சூழலில் இருதரப்பினரும் அதற்காகத் தொடர்ந்து பாடுபடவேண்டும் என்றார் பிரதமர்.