Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வரும் ஆண்டுகளில் மிதக்கும் மேடையில் தேசிய தின அணிவகுப்பு நடைபெறலாம்

தேசிய தின அணிவகுப்பு மரினா பே மிதக்கும் மேடையில் இவ்வாண்டுக்கு பிறகும் நடைபெறும் சாத்தியம் உள்ளது.

வாசிப்புநேரம் -

தேசிய தின அணிவகுப்பு மரினா பே மிதக்கும் மேடையில் இவ்வாண்டுக்கு பிறகும் நடைபெறும் சாத்தியம் உள்ளது.

இன்றைய முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இரண்டாம் தற்காப்பு அமைச்சர் ஒங் யீ கங் அதனைத் தெரிவித்துள்ளார்.

அணிவகுப்பு, கலை நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்குபெற்றோரைத் திரு ஒங் சந்தித்தார்.

2007ஆம் ஆண்டு மிதக்கும் மேடை நிறுவப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு மட்டுமே அதைப் பயன்பாட்டில் வைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்காலிகமாக அமைக்கப்பட்ட அந்த மேடை, சிங்கப்பூரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்ற இடமாக உருவெடுத்துள்ளதாய் திரு. ஒங் சொன்னார்.

அணிவகுப்பின்போது, கடல், நிலம் சார்ந்த தற்காப்பு அம்சங்களை சிறந்த முறையில் வெளிக்காட்ட மிதக்கும் மேடை வகை செய்துள்ளதை அவர் சுட்டினார்.

மிதக்கும் மேடை நன்கு பராமரிக்கப்படுள்ளதாக கூறிய திரு. ஒங், அதை மேலும் மேம்படுத்தும் திட்டமுள்ளதாகவும் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்