Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குறைந்தது 10 மானபங்கச் சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது

ஹோகாங், செங்காங் ஆகிய வட்டாரங்களில் குறைந்தது 10 மானபங்கச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 38 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
குறைந்தது 10 மானபங்கச் சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது

(படம்: ராய்ட்டர்ஸ்)

சிங்கப்பூர்: ஹோகாங், செங்காங் ஆகிய வட்டாரங்களில் குறைந்தது 10 மானபங்கச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 38 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 5ஆம் தேதிக்கும் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவ்விரு வட்டாரங்களில் வசிக்கும் சில பெண்கள் தாங்கள் மானபங்கப்படுத்தப்பட்டதாகக் காவல் துறையிடம் புகார் செய்துள்ளனர்.

அந்தக் குற்றங்களை ஒரே நபர் தான் செய்திருக்கக்கூடும் என அவர்கள் கொடுத்த அடையாளக் குறிப்புகள் காட்டின.

காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க பல முயற்சிகளை அந்தச் சந்தேக நபர் மேற்கொண்டிருந்ததாகக் காவல் துறை தெரிவித்தது.

குற்றச் சம்பவம் நடக்கும் இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி தமது மோட்டர்சைக்கிளைச் சந்தேக நபர் நிறுத்திவைத்திருந்ததாக நம்பப்படுகிறது.

அந்நபர் நேற்று ஆங்கர்வேல் ரோட்டில் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்