தற்காப்பு உறவு தொடர்ந்து பலப்படும் - சிங்கப்பூர், சீனா
சிங்கப்பூரும் சீனாவும் தற்காப்பு உறவை பலப்படுத்தக் கொண்டுள்ள கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.
சிங்கப்பூரும் சீனாவும் தற்காப்பு உறவை பலப்படுத்தக் கொண்டுள்ள கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.
அதே வேளையில், இரு தரப்பு நம்பிக்கையிலும் பரஸ்பர ஒத்துழைப்பிலும் அணுக்கமாகச் செயலாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், சீனத் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்சுவானோடு நடத்திய சந்திப்பில் அந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
வட்டார நிலைத்தன்மையையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கில், இருதரப்பு உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று, தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.