Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காதலியைக் கொடூரமாகக் கொன்ற ஆடவருக்குச் சிறை

காதல் உறவில் இருந்து சில மாதங்களுக்குப் பின்னர் பாதுகாப்பு அதிகாரி கேப்ரியல் லீ, தம்மைத் திருமணம் செய்யவேண்டி காதலி எல்சி லீயிடம் கேட்டுக்கொண்டார். திருமணம் நிச்சயித்த ஒரு வாரத்தில் லீ தமது காதலியை மிகக் கொடூரமான முறையில் கொன்றார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: காதல் உறவில் இருந்து சில மாதங்களுக்குப் பின்னர் பாதுகாப்பு அதிகாரி கேப்ரியல் லீ, தம்மைத் திருமணம் செய்யவேண்டி காதலி எல்சி லீயிடம் கேட்டுக்கொண்டார்.திருமணம் நிச்சயித்த ஒரு வாரத்தில் லீ தமது காதலியை மிகக் கொடூரமான முறையில் கொன்றார்.

தமது 24 வயது காதலியைப் பிசாசு என நம்பிய லீ, அவரது தலையை அறுக்க முயன்றதோடு அவருடைய கண்களையும் தோண்டியெடுத்தார்.

2012ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, கடுமையான காயங்களுடன் குமாரி எல்சியின் சடலம் அவர் தங்கியிருந்த வாடகை அறையில் கண்டெடுக்கப்பட்டது.

வளைக்கப்பட்ட சில கரண்டிகள் குமாரி எல்சி லீயின் தலைமுடிக்கு இடையில் சிக்கியிருந்ததை அங்கு சென்ற அதிகாரிகள் கண்டனர்.

டின்களைத் திறக்கும் கருவி, கத்திரிக்கோல், சுத்தியல், இலை தழைகளை வெட்டுவதற்கான கத்தி ஆகியவை அந்த அறையைச் சுற்றிலும் சிதறிக் கிடந்தன.

மேலாடை இல்லாத குமாரி லீயின் சடத்தின் அருகில் நிர்வாணமாய் இருந்த லீ மண்டியிட்டு, சிலுவையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்ததைப் போலீசார் கண்டனர்.

2011ஆம் ஆண்டில் லீ, எல்சீ ஆகிய இருவரும் இணையம் வழியே சந்தித்த மூன்று மாதங்களில் இணைந்து வாழத் தொடங்கினர்.

அப்போது தாம் தங்கியிருந்த வாடகை வீட்டிலில் பிசாசு இருந்ததாகவும் அது குமாரி லீக்குள் புகுத்துள்ளதாகவும் லீ நம்பத் தொடங்கினார். அதையடுத்து அவர் எல் சீயைக் கொடூரமாகக் கொலை செய்தார்.

லீக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டதை மனநல மருத்துவர்கள் உறுதி செய்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்