Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தின் அருகே தீப்பற்றிய கார் - 4 பேர் காயம்

சாங்கி விமான நிலையத்திற்கு இட்டுச் செல்லும் ஏர்போர்ட் புலவார்ட் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் கார் ஒன்று மோதி தீப்பற்றிக் கொண்டது.

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தின் அருகே தீப்பற்றிய கார் - 4 பேர் காயம்

(படம்: Channel NewsAsia)

சாங்கி விமான நிலையத்திற்கு இட்டுச் செல்லும் ஏர்போர்ட் புலவார்ட் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் கார் ஒன்று மோதி தீப்பற்றிக் கொண்டது.

பிற்பகல் 4 மணி அளவில் சம்பவம் பற்றி அறிந்த குடிமைத் தற்காப்புப் படையினர், தீயணைப்பு வாகனங்கள், அவசர முதலுதவி வண்டிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

விபத்தில் சிறு காயங்களுடன் தப்பிய நால்வர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்த பின்னரே கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது என்று சேனல் நியூஸ்ஏஷியா அறிகிறது.

அந்தத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்