கோல் கம்பம் விழுந்து பள்ளி மாணவர் மரணம்
காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது கோல் கம்பம் மேலே விழுந்ததால் கேலாங் மெத்தடிஸ்ட் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 13 வயது மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிங்கப்பூர்: காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது கோல் கம்பம் மேலே விழுந்ததால் கேலாங் மெத்தடிஸ்ட் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 13 வயது மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலையில் சக வகுப்பு மாணவர்களுடன் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது கோல் கம்பத்தைப் பிடித்ததால் கோல் கம்பம் அவர் மீது விழுந்தது.
சம்பவம் குறித்துக் காலை 9.35 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தலையில் காயங்களுடன் மாணவர் கே. கே. மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் வழியில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் பலனில்லை.
பின்னர், அச்சிறுவன் மாண்டதாக உறுதிசெய்யப்பட்டது.
அந்தச் சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என வகைப்படுத்தியுள்ள போலீஸ் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.