Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஈஷூன் பேருந்து நிறுத்தத்தில் மோதிய பேருந்து

ஈஷூன் எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தத்தில் கோ அஹேட் பேருந்து நிறுவனத்தின் பேருந்து மோதியுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: ஈஷூன் எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தத்தில் கோ அஹேட் பேருந்து நிறுவனத்தின் பேருந்து மோதியுள்ளது.

அது குறித்து, கோ அஹேட் நிறுவனம் விசாரித்து வருகிறது.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என கோ அஹேட் நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவிக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

விபத்து நேர்ந்த பாதையில் செல்லும் பேருந்துச் சேவைகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் அந்தக் குழுக்கள் பார்த்துக்கொண்டன.

சம்பவத்தில் சேவை எண் 85ஐக் கொண்ட ஈரடுக்குப் பேருந்து சம்பந்தப்பட்டதை சேனல் நியூஸ்ஏஷியாவுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம் காட்டுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்