Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்த ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை

இன்று ஈகைத் திருநாளை முன்னிட்டு சீமெய்யில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.  அதில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர்.

வாசிப்புநேரம் -

இன்று ஈகைத் திருநாளை முன்னிட்டு சீமெய்யில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.  அதில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர்.

மற்ற நோன்புப் பெருநாள் தொழுகைகளைக் காட்டிலும் இந்த வழிபாட்டில் ஒரு வேறுபாடு. சீமெய் ஸ்ட்ரீட் 1இன் புளோக்கின் அடித்தளத்தில் தொழுகை நடைபெற்றது. அவ்வட்டாரத்தின் அருகில் பள்ளிவாசல் இல்லாததால், புளோக்கின் கீழேயே சிறப்புத் தொழுகை நடத்த, JKIS இஸ்லாமியக் குழு ஏற்பாடு செய்தது.

படம்: Cheng Vi Ting

கூட்டுத் தொழுகையில், தற்காப்புக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் மலிக்கி ஓஸ்மானும் அடித்தள ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்