பிரெஞ்சு அதிபர் சிங்கப்பூருக்கு 2நாள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்
பிரெஞ்சு அதிபர் ஃபிரான்சுவா ஓலாண்ட் இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு நாளை சிங்கப்பூர் வருகிறார்.
பிரெஞ்சு அதிபர் ஃபிரான்சுவா ஓலாண்ட் இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு நாளை சிங்கப்பூர் வருகிறார்.
அதிகாரபூர்வமாக சிங்கப்பூருக்கு வருகைதரும் முதலாவது பிரெஞ்சு அதிபர் அவர்.
அதிபர் டோனி டான் கெங் யாம்மை திரு. ஓலாண்ட் சந்திக்கவுள்ளார்.
அதிபர் டான், நாளை அவருக்கு அதிகாரபூர்வ இரவு விருந்து அளித்து சிறப்பிப்பார்.
திங்கட்கிழமையன்று, பிரதமர் திரு. லீ சியென் லூங்கை பிரெஞ்சு அதிபர் சந்திப்பார்.
நான்கு பெரிய கொள்கல அணைகரைகளைச் செயல்படுத்தும் கூட்டு முயற்சியைத் தொடங்கி வைப்பதற்காக அவர், புதிய பாசிர் பாஞ்சாங் முனையத்துக்குச் செல்வார்.
சிங்கப்பூர்-பிரெஞ்சு புத்தாக்கக் கருத்தரங்கிலும் திரு. ஓலாண்ட் கலந்துகொள்வார்.
மாறிவரும் உலகச் சூழலில், சிங்கப்பூருடன் பிரான்ஸ் கொண்டுள்ள உத்திபூர்வ பங்காளித்துவம் பற்றிய விரிவுரை ஒன்றையும் அவர் ஆற்றுவார்.