மென்செஸ்டர், ஜக்கர்த்தா தாக்குதல்களைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பாதுகாப்புச் சோதனைகள் தீவிரம்
ஆகாயம், நிலம், நீர் ஆகிய சோதனைச்சாவடிகள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது சிங்கப்பூர்.
சிங்கப்பூர்: ஆகாயம், நிலம், நீர் ஆகிய சோதனைச்சாவடிகள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது சிங்கப்பூர்.
மென்செஸ்டர், ஜக்கர்த்தா ஆகிய இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக உள்துறை அமைச்சு சொன்னது.
தொடர்ந்து நிலவரத்தைக் கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதில் அனைவருக்கும் பங்குண்டு என அது சொன்னது.
சந்தேகப்படும்படியான பொருள் அல்லது நபரைப் பார்த்தால் 1800-2626-473 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
அல்லது 999 என்ற எண் மூலம் காவல் துறையினரைத் தொடர்புகொள்ளலாம்.