ஜக்கர்த்தா குண்டுவெடிப்புத் தாக்குதல்: சிங்கப்பூர் கண்டனம்
கிழக்கு ஜக்கார்த்தாவின் கம்புங் மெலாயு பேருந்து முனையத்தில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலைச் சிங்கப்பூர் வன்மையாகக் கண்டித்துள்ளது.
கிழக்கு ஜக்கார்த்தாவின் கம்புங் மெலாயு பேருந்து முனையத்தில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலைச் சிங்கப்பூர் வன்மையாகக் கண்டித்துள்ளது.
அத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணமானவர்களை நீதியின்முன் நிறுத்த, இந்தோனேசியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராய் இருப்பதாகவும் சிங்கப்பூர் கூறியிருக்கிறது.
இதுவரை, அந்தச் சம்பவத்தில் சிங்கப்பூரர் யாரும் நேரடியாகப் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை என்று வெளியுறவு அமைச்சு கூறியது.
ஜக்கார்த்தாவிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகம், இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து, நிலைமையை அணுக்கமாய்க் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.