கிளார்க் கீ பாலத்திலிருந்து தண்ணீரில் விழுந்த ஆடவரைத் தேடும் முயற்சிகள் தீவிரம்
சிங்கப்பூரின் கிளார்க் கீ பகுதியில் அமைந்துள்ள ரீட் பாலத்திலிருந்து நேற்று விழுந்த 27-வயது ஆடவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிங்கப்பூரின் கிளார்க் கீ பகுதியில் அமைந்துள்ள ரீட் பாலத்திலிருந்து நேற்று விழுந்த 27-வயது ஆடவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில், சம்பவம் குறித்துக் காவல்துறையினருக்குத் தெரியவந்தது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, 4 மணி அளவில் , தீயணைப்பு வண்டி, அவசர முதலுதவி வண்டி, மூன்று துணை வாகனங்களுடன் தேடல் பணியைத் தொடங்கியது.
சிங்கப்பூர் ஆற்றில் இரு முக்குளிப்பாளர்கள் ஆடவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆற்றின் மேல்பரப்பிலும் குடிமைத் தற்காப்புப் படையினர் தேடல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அவரைத் தேடும் பணி தொடர்கிறது.