ரமலான் மாதத்தின் முதல் பிறை
இன்று மாலை சூரியன் மறைந்து 39 நிமிடங்களுக்குப் பிறகு ரமலான் மாதத்தின் முதல் பிறை தென்பட்டது.
சிங்கப்பூர்: இன்று மாலை சூரியன் மறைந்து 39 நிமிடங்களுக்குப் பிறகு ரமலான் மாதத்தின் முதல் பிறை தென்பட்டது.
புருணை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஒப்புக்கொண்ட முறையின் கீழ் அது உறுதிசெய்யப்பட்டது.
ரமலான் தொடங்குவதையொட்டி சிங்கப்பூர் முஸ்லிம்கள் அனைவருக்கும் முஃப்தி டாக்டர் முகம்மது ஃபத்ரிஸ் பக்ரம் (Fathris Bakram) வாழ்த்துக் கூறியுள்ளார்.
குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இணைந்து பல்வேறு நல்லறங்களில் பங்கேற்று உறவை வலுப்படுத்த நோன்புக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.