மே மாதத்தில் அதிக இந்திய நாட்டுப் பயணிகளைக் கையாண்ட சாங்கி விமான நிலையம்
சாங்கி விமான நிலையம் சென்ற மாதம் 5 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. சென்ற ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க அந்த எண்ணிக்கை 4.6 விழுக்காடு அதிகம்.
சாங்கி விமான நிலையம் சென்ற மாதம் 5 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. சென்ற ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க அந்த எண்ணிக்கை 4.6 விழுக்காடு அதிகம்.
தெற்காசிய நாடுகளிலிருந்து வந்த பயணிகளின் எண்ணிக்கை 17 விழுக்காடு உயர்ந்ததே அதற்குக் காரணம் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து வந்த பயணிகளின் எண்ணிக்கை 21 விழுக்காடு உயர்ந்தது. சாங்கியின் 10 முன்னணிச் சந்தைகளில் அந்நாட்டிலிருந்து வந்த பயணிகளின் எண்ணிக்கையே ஆக அதிகமாக உயர்ந்தது. மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து வந்த பயணிகளின் எண்ணிக்கை 20 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்தது.